ரபிசி குற்றவாளி என்ற தீர்ப்பை உயர் நீதிமன்றம் நிலைநிறுத்தியது

rafizi1இன்று    கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றம்,    அதிகாரப்பூர்வ  இரகசிய  சட்ட(ஓஎஸ்ஏ)க் குற்றச்சாட்டில்    பாண்டான்   எம்பி   ரபிசி   ரம்லி  குற்றவாளிதான்   என்பதையும்  அவருக்கு   கொடுக்கப்பட்ட   18மாதச்   சிறைத்தண்டனையையும்    நிலைநிறுத்தியது.

அதேவேளை,  நீதிபதி   அஸ்மான்   அப்துல்லா,      செஷன்ஸ்   நீதிமன்றத்தில் ரபிசிமீது   சுமத்தப்பட்ட   இரண்டாவாது   ஓஎஸ்ஏ   குற்றச்சாட்டிலிருந்து    அவரை   விடுவித்தார்.

பிகேஆர்   உதவித்   தலைவருமான    ரபிசி   மேல்முறையீடு    செய்வதற்கு  இடமளித்து  தண்டனையையும்    அவர்   நிறுத்தி   வைத்தார்.

முன்னதாக  செஷன்ஸ்  நீதிமன்றத்தில்   ரபிசிமீது   இரண்டு   ஓஎஸ்ஏ    குற்றச்சாட்டுகள்   சுமத்தப்பட்டு    இரண்டிலும்   அவர்   குற்றவாளியே   என்று   தீர்ப்பளிக்கப்பட்டு   அவருக்கு  18மாதச்   சிறைத்தண்டனையும்   விதிக்கப்பட்டது.

1எம்டிபி  மீதான     தலைமைக் கணக்காய்வாளர்     அறிக்கையின்  உள்ளடக்கத்தை    வெளியிட்டார்    என்பது   ரபிசிமீதான   குற்றச்சாட்டு.    அந்த   ஆவணத்தை   வைத்திருந்தார்   என்ற  மற்றொரு   குற்றச்சாட்டில்    அவர்  விடுவிக்கப்பட்டார்.