காலிட் செப்டம்பர் 5-இல் பணி ஓய்வு பெறுகிறார்

igpநான்காண்டுகள்   போலீஸ்   படைத்    தலைவராக   பணியாற்றிய  இன்ஸ்பெக்டர்- ஜெனரல்  அப்   போலீஸ்   காலிட்   அபு   பக்கார்,  செப்டம்பர்   5-இல்  60-வயதாவதைத்   தொடர்ந்து    பணி   ஓய்வு   பெறுவார்.

“இது   என்  சொந்த   முடிவு. ஓய்வுகொள்ள   வேண்டிய   தருணம்   வந்து   விட்டது”,  என   காலிட்  பெரித்தா   ஹாரியானிடம்    தெரிவித்தார்.

காலிட்,  1976-இல்,  19வது   வயதில்   போலீசில்     சேர்ந்தார்.  பின்னர்  அவர்   அனைத்துலக   இஸ்லாமிய   பல்கலைக்கழகத்தில்    சேர்ந்து   1995-இல்   சட்டத்துறையில்   பட்டம்  பெற்றார்.

2013-இல்  இஸ்மாயில்   ஒமார்    பணி  ஓய்வு  பெற்றதும்   காலிட்   ஐஜிபி   ஆனார்.

காலிட்டுக்குப்  பிறகு   போலீஸ்  படைத்   துணைத்தலைவர்   நூர்  ரஷிட்   இப்ராகிம், 59,   புதிய   ஐஜிபி-ஆக   பொறுப்பேற்பார்   என்று    எதிர்பார்க்கப்படுகிறது.