மெமாலி மீது ஆர்சிஐ : வரவேற்கிறார் மூசா ஹித்தாம், ஆனால் தேர்தலுக்குப் பின்னர்தான் அதை அமைக்க வெண்டும் என்றார்

musaமுன்னாள்   துணைப்   பிரதமர்     மூசா   ஹித்தாமுக்கு  18  பேரின்  உயிரை   உறிஞ்சிய   மெமாலி  சம்பவத்தை   விசாரிக்க   அரச   ஆணையம்   அமைக்கப்படுவதில்   ஆட்சேபனை   எதுவும்  இல்லை.

ஆனால்,  அரசியல்வாதிகள்   அதை   வைத்து  அரசியல்    ஆதாயம்    தேடிக்கொள்வதைத்   தவிர்க்க,    அந்த   ஆர்சிஐ   பொதுத்  தேர்தலுக்குப்   பின்னரே  அமைக்கப்பட   வேண்டும்    என்றவர்   கருதுகிறார்.

ஆர்சிஐ   அமைக்க    அவசரம்   காட்ட   வேண்டியதில்லை    என்றாரவர்.