வேதாவை அடுத்து பழனிவேல் ஆதரவாளர்களுக்கு வலை வீசுகிறார் மகாதிர்

palani முன்னாள்   பிரதமர்    டாக்டர்   மகாதிர்    முகம்மட்   எதிர்வரும்    பொதுத்   தேர்தலில்   பக்கத்தான்   ஹராபானுக்கு   இந்திய  வாக்காளர்களின்  ஆதரவைப்  பெறும்   முயற்சியில்  மஇகா  முன்னாள்    தலைவர்    ஜி.வடிவேலின்   ஆதரவாளர்களுக்கு   வலைவீசுவதாக   செய்தி   வந்துள்ளது.

இதன்   தொடர்பில்  பார்டி  பிரிபூமி   பெர்சத்து   அவைத்  தலைவர்  மகாதிர் பழனிவேலைச்   சந்திக்க   விரும்பி   அவருக்கு   அழைப்பு   விடுத்திருப்பதாக   மக்கள்  ஓசை   நாளேடு   கூறியது.   அவ்விருவரும்   அடுத்த   வாரம்    சந்திப்பார்கள்    என்று    தெரிகிறது.