மகாதிர்: நான் சாவதையே பலரும் விரும்புகிறார்கள்

dr mதம்முடைய    உடல்நலன்   குறித்து   யாரும்   கவலைகொள்ள     வேண்டியதில்லை    என்று   கூறிய    முன்னாள்   பிரதமர்    டாக்டர்    மகாதிர்    தம்   எதிரிகள்தான்  தாம்    சாவதைக்  காண   பெரிதும்   விரும்புகிறார்கள்    என்றார்.

“நான்  நன்றாகத்தான்   இருக்கிறேன்.  கடுமையான   நோயில்   அடிபட்டு  மீண்டு  வந்ததுபோலவா    தோற்றமளிக்கிறேன்?

“நான்  சாவதைப்  பலர்  விரும்புகிறார்கள். நான்  இருப்பது   அவர்களுக்குத்   தொல்லை  என்றும்  நாட்டுக்கு   ஆபத்து    என்றும்    நினைக்கிறார்கள்”,  என  இன்று  புத்ரா  ஜெயாவில்   செய்தியாளர்களிடம்   மகாதிர்    தெரிவித்தார்.

மகாதிர்   சுவாசிக்க    சிரமப்படுவதாகவும்   அதனால்  மருத்துவ   மனையில்   தீவிர   கவனிப்புப்   பிரிவில்   அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும்    சமூக   ஊடகங்களில்    வலம்வரும்   ஒரு   செய்திக்கு   எதிர்வினையாக  மகாதிர்   இவ்வாறு   கூறினார்.

ஆனாலும் ,    அண்மையில்தான்  92வது   பிறந்த    நாளைக்   கொண்டாடிய மகாதிரின்   உடல்நலன்    குறித்து  அவர்   தலைமை   ஏற்றுள்ள   பக்கத்தான்  ஹராபான்  கூட்டணியின்   ஆதரவாளர்கள்   கவலை   கொண்டிருக்கிறார்கள்

மகாதிருக்கு   இருதயக்  கோளாறு   உண்டு.  1989 -இலும்  பின்னர்  2007-இல்  மீண்டும்   அவர்   இருதய    அறுவை சிகிச்சை   செய்து  கொண்டார். கடந்த   ஆண்டில்   இருதய  சிகிச்சைக்காக    அவர்  மருத்துவமனையில்   அனுமதிக்கப்பட்டிருந்தார்.