இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்! சர்வதேச மன்னிப்புச் சபை

amnesty-international-logoகொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகளுக்கான கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில், இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மன்னிப்புச் சபை,

இலங்கை பாதுகாப்புத் தரப்பினருக்கு மனிதவுரிமைகள் சட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும்.

இலங்கை அரசாங்கம் இதுவரை கொடுத்த வாக்குறுதிகள் தொடர்பில் அழுத்தங்கள் கொடுக்கப்படவேண்டும். முன்னர் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றுவதில் தாமதங்கள் நிலவுகின்றன.

உண்மைகளைக் கண்டறியும் பொறிமுறைகளுக்கு அவசியமான தொழில்நுட்ப உதவிகளையும் இலங்கை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை கேட்டுக்கொண்டுள்ளது.

-tamilwin.com

TAGS: