அரசியல் கைதிகள் விடயத்தில் என்னிடத்தில் எந்த அதிகாரமும் இல்லை: டி.எம்.சுவாமிநாதன்

swamy nathan“அரசியல் கைதிகள் விடயத்தில் நீதியமைச்சே இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டும்.

என்னுடைய அமைச்சுக்கு அது தொடர்பில் எந்தவிதமான அதிகாரமும் இல்லை.” என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து சமயத்துறை அமைச்சரான டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவர்களில் ஒருவரின் குடும்பத்துக்கு வீடு அமைத்துக் கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு யாழ்ப்பாணம் குளப்பிட்டியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அரசியல் கைதிகளில் விடுதலை தொடர்பில் பல தடவைகள் நான் நீதியமைச்சரோடு பேசியுள்ளேன். அரசியல் கைதிகள் பல ஆண்டு காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு ஒரு முடிவு கிடைக்க வேண்டும். ஆனால், அதற்கான அதிகாரம் என்னிடத்தில் இல்லை. சட்டமா அதிபர் திணைக்களத்துடன் பேசி வழக்குகள் ஏன் தாமதமடைகின்றன என்பது தொடர்பில் அறிய முற்படுகின்றேன்.” என்றுள்ளார்.

-puthinamnews.com

TAGS: