தாய்லாந்து முன்னாள் பிரதமரை கைது செய்ய ஆணை

 
Yingluckபதவியிலிருந்து அகற்றப்பட்ட தாய்லாந்து முன்னாள் பிரதமர் இங்லக் ஷினவாட்ரா நாட்டை விட்டு தப்பியோடி விட்டார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரம் கூறுகிறது. அவருக்கு எதிராக தாய்லாந்து இராணுவ ஆட்சியாளர்கள் தொடர்ந்திருந்த வழக்கில் அவர் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவிருந்த நாளில் நீதிமன்றத்திற்கு வரத் தவறியதால் தாய்லாந்து உச்சநீதிமன்றம் அவரைக் கைது செய்ய உத்தரவு பிரப்பித்தது.

“அவர் நிச்சயமாக தாய்லாந்தை விட்டுப் போய்விட்டார்”, என்று நெருக்கமான வட்டாரம் ஒன்று கூறிற்று. அவர் முன்னாள் பிரதமர் இங்லக்கின் கட்சியைச் சேர்ந்தவர்.

அவர் இப்போது எங்கிருக்கிறார் என்பதை வட்டாரங்கள் தெரிவிக்கவில்லை.