பாஸுக்கு எதிராக அனைத்துலக அளவில் சதித் திட்டமாம்

pasபாஸ்   கட்சி   ஏற்கனவே   1எம்டிபிக்கு    எதிராக    அமெரிக்க  நீதிமன்றத்தில்    வழக்கு    தொடுக்கப்பட்டிருப்பதை  “வெளியார்   தலையீடு”   என்று    வருணித்துள்ளதை    அறிவோம்.  இப்போது     பாஸ்   தலைவர்களில்   ஒருவர்   அந்த இஸ்லாமியக்   கட்சியின்  பெயரைக்  கெடுப்பதற்கு      அனைத்துலக     அளவில்    சதி    செய்யப்படுவதாகக்  கூறுகிறார்.

இச்சதித்   திட்டமே    தம்  கட்சி    அம்னோவுடன்   ஒத்துழைத்து   சிலாங்கூரைக்  கைப்பற்ற   திட்டமிட்டு   வருவதாகக்  கூறும்    செய்திக்கும்   காரணமாக  இருக்கலாம்   என    பாஸின்  சிலாங்கூர்  ஆட்சிக்குழு   உறுப்பினர்   இஸ்கண்டர்   ஏ.சமட்  கூறினார்.

“அச்செய்தியை   பாஸின்  பிம்பத்தைக்   கெடுக்கும்  முயற்சியாகத்தான்  கருத   வேண்டும்.

“அது  அடிப்படையற்ற   ஒரு  வதந்தி.

“அது   பாஸை  உள்ளும்  புறமும்   தாக்கும்  அனைத்துலகச்   சதியாகக்கூட   இருக்கலாம்,  (லண்டனிலிருந்து   செயல்படும்   சரவாக்  ரிப்போர்ட்போல”,  என்றவர்  ஓர்   அறிக்கையில்   கூறினார்.