தாய்லாந்து முன்னாள் பிரதமர் இங்லக் டுபாய்க்குத் தப்பி ஓடிவிட்டாராம்

thaiஒரு  வழக்கில்   பத்தாண்டுச்   சிறைத்தண்டனையை     எதிர்நோக்கிய    தாய்லாந்து   முன்னாள்   பிரதமர்   இங்லக்  ஷினவட்ரா   டுபாய்க்குத்   தப்பி   ஓடிவிட்டதாக   அவரது   கட்சியின்  மூத்த   உறுப்பினர்கள்    கூறினர்.

முன்னாள்  பிரதமர்  கடந்த   வாரமே   தாய்லாந்தை  விட்டு  வெளியேறி    சிங்கப்பூர்   வழியாக  டுபாய்க்குப்  பறந்தார்   என  பியு   தாய்   கட்சி   வட்டாரங்கள்    தெரிவித்தன. டுபாயில்  இங்லக்கின்   சகோதரர்  தக்‌ஷின்   ஷினவர்ட்   இருக்கிறார்.  தக்‌ஷினும்  2008-இல்   ஒரு    ஊழல்  வழக்கில்  குற்றவாளி   எனத்   தீர்ப்பளிக்கப்பட்டு   தண்டனையை   எதிர்நோக்கியிருந்த    வேளையில்   தண்டனையிலிருந்து   தப்பிக்க    டுபாய்  சென்று  அங்கேயே   நாடுகடந்து    வாழ்ந்து   வருகிறார்.

ஆனால்,  தேசிய  போலீஸ்   படைத்   துணைத்   தலைவர்   ஜெனரல்  ஸ்ரீவரா  ராங்சிப்ராமனாகுல் ,  இங்லக்    நாட்டை  விட்டு  வெளியேறிவிட்டார்   என்பதை   உறுதிப்படுத்தும்  தகவல்   எதுவும்  போலீசிடம்  இல்லை   என்றார்.