இந்திய மீனவர்களுக்கு உதவுவதே சிறந்த வழி : கடற்படையின் புதிய தளபதி தமிழர் ட்ராவிஸ் சின்னையா

dravisஇந்திய மீனவர்களின் கடல் எல்லை பிரச்சினைகளை எதிர்கொள்வதை தடுக்கும் முகமாக அவர்களுக்கு உதவும் செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக கடற்படையின் புதிய தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரச ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்திய மீனவர்கள் கடந்த 100 வருடங்களாக இலங்கையின் கடலில் அத்துமீறி வருகின்றனர். எனவே அவற்றை ஒரு இரவில் தடுத்து விடமுடியாது என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இந்திய மீனவர்களை எல்லையை கடக்க முடியாதப்படி அவர்களுக்கு உதவுவதே சிறந்த வழி எனவும் ட்ராவிஸ் குறிப்பிட்டுள்ளார்.

-tamilwin.com

TAGS: