பேங்க் நெகரா முன்னாள் துணைத் தலைவர்: அன்னிய செலாவணி இழப்பு குறித்து மகாதிருடன் பேசியதில்லை

linபேங்க்   நெகரா  முன்னாள் துணைத்  தலைவர்   லின்  சீ    யான்,   அன்னிய   செலாவணி  இழப்பு   குறித்து     அப்போதைய   பிரதமர்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்டுடன்   விவாதிக்குமாறு    யாரும்    தம்மைக்   கேட்டுக்கொண்டதில்லை     என்றார்.

லின்,   அன்னிய   செலாவணி   இழப்பைக்  கண்டறிய   விசாரணை   நடத்திவரும்   அரச    ஆணைய(ஆர்சிஐ)த்திடம்  இன்று    வாக்குமூலம்  அளித்தார்.

அந்த  விவகாரத்தை   வேறு   யாரேனும்   பிரதமரிடம்    தெரிவித்தார்களா    என்பதும்    தமக்குத்     தெரியாது   என்றாரவர்.

ஆனால்,  அது  தொடர்பாக   பேங்க்  நெகரா   கவர்னர்   ஜப்பார்   உசேனுடன்   பேசிய   பிறகு    அப்போதைய   நிதி   அமைச்சர்   அன்வார்    இப்ராகிம்   தம்மை   அழைத்துப்   பேசியதாக   லின்   கூறினார்.

“அவரைச்   சந்தித்துப்  பேசிய   தேதி   சரியாக   நினைவில்லை”,  என்றாரவர்.