நான்கு மாநிலங்களில் தேர்தல் போராட்டத்திற்கு பெர்சத்து தலைமை ஏற்கும்

 

Bersatutoleadநான்கு மாநிலங்களில் எதிரணி ஹரப்பானின் தேர்தல் போராட்டத்திற்கு பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) தலைமை ஏற்கும். ஜோகூர், பேராக், கெடா மற்றும் பெர்லிஸ் ஆகிய மாநிலங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இன்று வெளியிடப்பட்ட மாநில தலைவர்கள் பட்டியலின்படி, பெர்சத்துவின் தலைவர் முகைதின் யாசின் ஜோகூர் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பெர்சத்துவின் துணைத் தலைவர் முக்ரீஸ் மகாதிர் கெடா மாநில ஹரப்பானுக்கு தலைமை ஏற்கிறார். பிரதமர் நஜிப்பால் பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்பு முக்கிரீஸ் அம்மாநிலத்தின் மந்திரி புசாராக இருந்தார்.

பேராக் பெர்சத்து தலைவர் அஹமட் ஃபைஸால் அஸுமு மற்றும் பெர்லிஸ் தலைவர் அமீர் ஹசான் ஆகிய இருவரும் அவரவர் மாநில ஹரப்பானுக்கு தலைமை ஏற்பார்கள்.