எகிப்திய கடற்படை எட்டு மலேசியர்களைக் காப்பாற்றியது

egyptநேற்று  செங்கடலின்  வடக்குக்  கரையோரத்துக்கு   அப்பால்,     மூழ்கும்  நிலையில்    இருந்த     ஒரு   சுற்றுலா   படகிலிருந்து   எட்டு  எகிப்தியர்களையும்  ஒன்பது  மலேசியர்களையும்    எகிப்திய   கடற்படை   காப்பாற்றியதாக  சின்ஹுவா   செய்தி  நிறுவனம்   அறிவித்தது.

கடலில்  மூழ்கிக்கொண்டிருந்த  படகிலிருந்து  அபய  அழைப்பு  வந்ததை   அடுத்து  கடல்படை  விரைந்து   சென்று   அந்த  17பேரையும்   மீட்டதாக  இராணுவப்   பேச்சாளர்   ஒருவர்   தெரிவித்தார்.

“இன்னும்  ஒரு  எகிப்தியரைக்  காணவில்லை.  தேடிக்கொண்டிருக்கிறோம்”,  என்றாரவர்.

-பெர்னாமா