பேரரசர் பிறந்தநாளை முன்னிட்டு, தலைமை நீதிபதிக்கும் சாமிவேலுவுக்கும் ‘துன்’ விருது

துன்இன்று, மாட்சிமை தங்கியப் பேரரசர், சுல்தான் முஹமட் V அவர்களின் பிறந்த நாளையொட்டி, தேசிய உயர்மட்ட விருதான ‘துன்’ விருதை, நாட்டின் மூன்று முக்கிய நபர்கள் பெறுகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 4-ல், நாட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட முஹமட் ராவுஸ் ஷாரிஃப், இந்தியா, தெற்காசியாவுக்கான சிறப்புத் தூதர் ச.சாமிவேலு மற்றும் முன்னாள் அமைச்சர் மைக்கல் சென் விங் சும் ஆகியோரே இந்த ‘துன்’ விருதை பெறும் மூவர் ஆவர்.

இவர்களோடு, மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், தேசியப் போலிஸ் படைத் தலைவர், மலேசிய இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் உட்பட, 1,518 பேர் இன்னும் பிற விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர்.