எம்ஏசிசி: கையூட்டுக் கொடுப்பவர்கள் எங்களைக் கண்டு பயப்படுகிறார்கள்

maccமலேசிய   ஊழல்தடுப்பு   ஆணைய (எம்ஏசிசி)  தலைவர்   சுல்கிப்ளி   அஹ்மட்,  ஆணையத்தை  நினைத்து  கையூட்டுக்  கொடுப்பவர்கள்   பயப்படுகிறார்கள்  என்கிறார்.

எம்ஏசிசி  மேற்கொண்ட    நடவடிக்கைகள்  குறித்த   செய்திகளைச்  சுட்டிக்காட்டிய   சுல்கிப்ளி,  ஆணையம்  குறித்து   அச்சம்   நிலவுவது  உண்மைதான்   என்றார்.

“நான்  சந்தித்த   பலர்,   ஊழல்   குறைந்திருப்பது   கண்கூடு   என்று   தெரிவித்தனர்.  இது   எங்கள்   நடவடிக்களால்  விளைந்த  பலன்”,  என்றுரைத்த   அவர்,   நடவடிக்கைகள்    தொடரும்     என்றார்.