14ஆவது பொதுத் தேர்தல் வேட்பாளர்கள்: இறுதி முடிவு நஜிப்பிடம் விடப்பட்டுள்ளது

 

எதிர்வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் பிஎன் வேட்பாளர்கள் குறித்த இறுதி முடிவைச் செய்யும் அதிகாரம் பிரதமர் நஜிப் ரசாக்கிடம் அம்னோ உச்சமன்றம் கொடுத்துள்ளதாக அம்னோ தகவல் பிரிவு அனுவார் மூசா தெரிவித்தார்.

இம்முடிவின் இறுதி நோக்கம் எதிரணியின் வேட்பாளர்களைவிட பிஎன் வேட்பாளர்கள் சிறந்தவர்கள் என்பதை உறுதிசெய்வதாகும் என்றாரவர்.

பாரிசான் பங்காளிக்கட்சிகள் சில தொகுதிகளில் போட்டியிடுவதற்கான அவர்களின் உரிமைகள் பற்றி பகிரங்கமாக சண்டையிட்டுக் கொள்ளக்கூடாது என்று நஜிப் உத்தரவிட்டிருந்தார்.

நஜிப்பின் இந்த உத்தரவு கேமரன் மலைத் தொகுதி சம்பந்தமாக மஇகா மற்றும் மைபிபிபி ஆகியவற்றுக்கிடையில் நிலவும் இழுபறியையும் உள்ளடக்கியது என்று தாம் நம்புவதாக மஇகா தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் கருத்துரைத்தார்.