ராஜா ஸரித்: சிறார்கள் ஆங்கிலம் பயில கூடுதல் வாய்ப்புகள் தேவை

பெர்மைசூரி    ஜோகூர்   ஸரித்   சோபியா    அல்மர்ஹும்  சுல்தான்   இட்ரிஸ்   ஷா,    மலேசிய   சிறார்கள்   ஆங்கிலம்   கற்றுத்  தேர்ந்து   உலக    அரங்கில்    அவர்களுக்குரிய   இடத்தைப்   பெறுவதற்குக்   கூடுதல்   வாய்ப்புகளை   உருவாக்குக்  கொடுக்க   ஒருங்கிணைந்த   முயற்சிகள்   தேவை  என்கிறார்.

ஆங்கிலத்தில்   பேசும்  எழுதும்   திறன்   மிக   மோசமாக  தரம்  தாழ்ந்து  போயிருப்பதால்  இதைச்   செய்வது   அவசரமும்    அவசியமும்   ஆகும்    என்றாரவர்.

“இந்நிலையைத்   திருத்த    அரசாங்கத்தை  மட்டுமே   நம்பிக்   கொண்டிருக்கக்  கூடாது.  ஆங்கிலமொழி   ஆசிரியர்கள்,  அரசுசார்பற்ற   அமைப்புகள் (என்ஜிஓகள்),  பெரிய   நிறுவனங்கள்   ஆகியோர்    ஒன்றிணைந்து  முனைப்புடன்  ஈடுபட   வேண்டும்”,  என்றவர்   இன்று  ஜோகூர்   பாருவில்   ஓர்   அறிக்கையில்   கூறினார்.

மலேசிய   ஆங்கில  மொழி  கற்பிக்கும்  சங்கத்தின்   புரவலருமான   ராஜா  ஸரித்  சோபியா,  சம்பந்தப்பட்ட   தரப்பினர்   அனைவரும்  மாணவர்கள்   ஆங்கிலத்தில்   எழுதுவதையும்   பேசுவதையும்   ஊக்குவித்து    வர   வேண்டும்  என்றும்   கேட்டுக்கொண்டார்.