ஜொகூரில் பீர் விழா, நடத்தலாம் என்கிறார் மந்திரி புசார்

 

அக்டோபர் விழா (பீர் விழா) ஜோகூர் மாநிலத்தில் நடத்தப்படுவதற்கு மாநில அரசு அனுமதி அளித்துள்ளதை மாநில மந்திரி புசார் தற்காத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இதற்கு காரணம் இந்நிகழ்ச்சி பகிரங்கமாக ஊக்குவிக்கப்படவில்லை என்பதோடு இது திரைக்குப் பின்னால் நடத்தப்படுகிறது என்றாரவர்.

இது நீண்டகாலமாக நடந்து வருகிறது. இது விளம்பரப்படுத்தப்படவில்லை, சில மாநிலங்களில் நடப்பது போல் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை என்று அவர் மேலும் கூறினார்.

“இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை” என்று மந்திரி புசார் முகமட் காலிட் நோர்டினை மேற்கோள் காட்டி சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த அக்டோபர் விழா ஜோகூரில் ஒரு தங்கும்விடுதியில் அக்டோபர் 13 மற்றுக் 14 இல் நடைபெறும் என்று சமூக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.