ஒருதலைப்பட்ச மதமாற்றத்தைத் தடுக்க அரசமைப்பைத் திருத்தும் சட்டவரைவு: பிகேஆர் எம்பி முன்மொழிவார்

18 வயதுக்குக்  குறைவான   பிள்ளைகளை   ஒருதலைப்பட்சமாக    மதமாற்றம்   செய்வதற்கு   முற்றுப்புள்ளி  வைக்க  கூட்டரசு  அரசமைப்பில்  திருத்தம்   செய்யக்  கோரும்   சட்டவரைவு  ஒன்றை    பிகேஆர்  எம்பி  ஒருவர்  அக்டோபர்   23-இல்   கூடும்   நாடாளுமன்றத்தில்   முன்வைப்பார்.

அலோர்  ஸ்டார்   எம்பி  கூய்   ஹிஸியாவ்   லியோங்,   அந்த   உத்தேச   சட்டவரைவு    குறித்து     மக்களவைச்    செயலாளர்    ரூஸ்மே   ஹம்சாவுக்குக்    கடிதம்   எழுதியிருப்பதாகக்  கூறினார்.

கூட்டரசு   அரசமைப்பின்  பகுதி 12(4)-இல்  18வயதுக்குக்    குறைந்த   ஒருவரின்  சமயம்    அவரின்  பெற்றோர்   அல்லது  பாதுகாவலரால்   தீர்மானிக்கப்படும்  என்று  கூறுகிறது.  அதில்   “பெற்றோர்”   என்றிருப்பதை   “பெற்றோர்  இருவராலும்”   என்று  மாற்றுவதற்கு   அச்சட்டவரைவு   பரிந்துரைக்கிறது    என்றார்  கூய்.

சிலர்    அதில்   உள்ள  ‘ பெற்றோர்’   என்பது   ஒருமைச்  சொல்   என்று   கூறி,  குழந்தையின்   மதத்தைத்  தீர்மானிக்க   பெற்றோர்   ஒருவரின்  முடிவு   போதும்   என்கிறார்கள்