புக்கிட் பிந்தாங் கருப்புப் பெட்டியில் குண்டு இல்லை

நேற்றிரவு   கோலாலும்பூர்,  புக்கிட்   பிந்தாங்கில்   பிரபலமான   பொருள்  விற்பனை  மையத்தின்  நுழைவாயிலுக்கு   அருகில்   கண்டெடுக்கப்பட்ட   ஒரு    கருப்புப்  பெட்டியில்   குண்டு   எதுவும்   இல்லை   என்பதை   போலீஸ்   உறுதிப்படுத்தியது.

சந்தேகத்துக்குரிய   அப்பெட்டி   குறித்து    தொலைபேசி  அழைப்பு   கிடைத்ததும்   குண்டைச்  செயலிழக்கச்   செய்யும்  குழு  ஒன்று   அங்கு   அனுப்பப்பட்டதாக    டாங்   வாங்கி   போலீஸ்   மாவட்டத்   தலைவர்   முகம்மட்   சுக்ரி   கமான்   கூறினார்.

“சோதனை   செய்து   பார்த்ததில்    அதில்   குண்டோ      வெடிக்கும்  பொருள்களோ   இல்லை   என்பது   தெரிய  வந்தது”,  என்றாரவர்.

அப்பொருளை   அங்கு  வைத்தது   யார்  என்பதைக்   கண்டறிய   போலீஸ்   விசாரணை   நடத்தி   வருகிறது.

-பெர்னாமா