ஆஸ்திரேலியா: காணாமல்போன எம்எச் 370 விமானம் தொடர்பான மர்மம் நீடிப்பது ஏற்றுக்கொள்ளமுடியாதது

மலேசிய   விமான  நிறுவனத்தின்   காணாமல்போன    எம்எச்370  விமானத்தைத்  தேடிக்  கண்டுபிடிக்கும்  முயற்சியில்  ஈடுபட்ட   ஆஸ்திரேலிய    அதிகாரிகள்   அது  தொடர்பான   வெளியிட்டுள்ள  இறுதி   அறிக்கையில்   விமானத்துக்கு  என்னவானது   என்ற   மர்மம்  நீடிப்பது    “ஏற்றுக்கொள்ளமுடியாதது”   என்று  கூறினார்கள்.

“விமானத்தைக்  கண்டுபிடித்தாலொழிய  அதற்கு   என்னவானது    என்பதைத்   துல்லியமாகக்  கூறுவதற்கில்லை”,  என  ஆஸ்திரேலிய   போக்குவரத்துப்  பாதுகாப்புப்  பிரிவு   அவ்வறிக்கையில்   கூறியது.

“நவீன  வான்பயண   யுகத்தில்   பெரிய  வணிக  விமானமொன்று   காணாமல்  போய்   அந்த  விமானத்துக்கு   என்னவானது,   விமானத்தில்   இருந்தவர்கள்    என்னவானார்கள்   என்பது  உலகுக்குத்   தெரியாமலிருக்கிறது   என்பது  நம்ப  முடியாதது,  நிச்சயமாக,  சமுதாயத்தால்   ஏற்றுக்கொள்ள  முடியாதது”,  என்றது   குறிப்பிட்டது.

2014 மார்ச் 8-இல்,  239  பேருடன்  கோலாலும்பூரிலிருந்து   பெய்ஜிங்   சென்று  கொண்டிருந்த  அந்த  போயிங்  777  விமானம்  மாயமானது     மிகப்  பெரிய  வான்பயண  மர்மமாக  மாறியுள்ளது.

விமானத்தைக்   கண்டுபிடிக்க   ஆஸ்திரேலியா  தலைமையில்  மலேசியாவும்  சீனாவும்   மேற்கொண்ட   மிகப்  பெரிய   தேடல்   பணி  மர்மம்   எதுவும்  துலங்காததால்  ஜனவரியில்  கைவிடப்பட்டது.