ரிம100 மில்லியன் களவாடிய அமைச்சின் ஐந்து அதிகாரிகளை எம்ஏசிசி அடையாளம் கண்டிருக்கிறதாம்

மலேசிய  ஊழல் எதிர்ப்பு   ஆணையம்  (எம்ஏசிசி)  ஓர்  அமைச்சின்   ஐந்து  அதிகாரிகள்  பத்து  நிறுவனங்களுடன்   சேர்ந்து  ரிம100 மில்லியன்  ரிங்கிட்வரை  சுருட்டியிருக்கலாம்  என  நம்புகிறது. அமைச்சின்  பெயரை  அது  குறிப்பிடவில்லை.

“பல   ஆண்டுகளாக    அவர்கள்  இதைச்  செய்து   வந்துள்ளனர்.  திட்டங்களைச்  செயல்படுத்துவதாகக்   கூறிக்கொண்டு   செயல்படுத்தாமலேயே   பணத்தை   அமுக்கி  விடுவார்கள்.

“கட்டுமானத்   திட்டங்களுக்கான  நிதியிலிருந்து   மட்டும்தான்  பணத்தைக்  கொள்ளையிட்டார்கள்   என்பதில்லை.

“ஏழை  மாணவர்களுக்கான   உணவுத்   திட்டத்தையும்   இவர்கள்  விட்டு  வைக்கவில்லை”,  என்று   எம்ஏசிசி  விசாரணை  குறித்து  நன்கு   அறிந்த    வட்டாரம்  ஒன்று   தெரிவித்ததாக  இன்றைய  நியு   ஸ்ரேய்ட்ஸ்  டைமஸ்  கூறியது.

திட்டங்களை   நிறைவேற்றி  விட்டதாக     எழுதி  வைப்பார்கள்.  ஆனால்,  எதுவும்   நிறைவேற்றப்பட்டிருக்காது.

எம்ஏசிசி   இதுவரை   அமைச்சின்   அதிகாரிகளுடன்  ஒத்துழைத்த  10  நிறுவனங்களை     அடையாளம்  கண்டுள்ளது.  விசாரணைகள்  நடந்து  கொண்டிருப்பதால்  நிறுவனங்களின்   எண்ணிக்கை   மேலும்   அதிகரிக்கலாம்  என  அவ்வட்டாரம்   தெரிவித்தது.