பேங்க் நெகரா தவறிழைக்கும் நிதி நிறுவங்களின் பெயர்களை வெளியிட்டு அசிங்கப்படுத்தும்

பேங்க்   நெகரா   2018  ஜவவரியிலிருந்து  விதிமுறைகளைப்   பின்பற்றாத  நிதி   நிறுவனங்கள்மீதும்   அவர்களின்  இடையீட்டாளர்கள்மீதும்    எடுக்கப்பட்ட   நடவடிக்கைகளை   வெளியிடும்.

இதனைத்   தெரிவித்த   பேங்க்  நகரா   ஆளுநர்   முகம்மட்   இப்ராகிம்,  நிதி   நிறுவனங்களின்   பெயர்கள்,  அவை   புரிந்த    தவறுகள்,  அவற்றுக்காக       விதிக்கப்பட்ட   அபராதத்    தொகைகள்  போன்ற   விவரங்கள்    மத்திய    வங்கி  அகப்பக்கத்தில்   வெளியிடப்படும்   என்றார்.

விதிமுறைகளைப்   பின்பற்றாத   நிதி   நிறுவங்கள்மீது   நடவடிக்கை    எடுக்க  பேங்க்  நெகரா   என்றும்   தயங்கியதில்லை   என்றும்   முகம்மட்   கூறினார்.