டோக்லாம் பகுதியில் சீனா ரோடு போடும் விவகாரம்: மோடி விளக்கம் அளிக்க வேண்டும் ராகுல் காந்தி

புதுடெல்லி, இந்திய எல்லையில் உள்ள டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தது. இப்போது அந்த பகுதியில் 500 ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் 12 கி.மீ. தூரத்துக்கு ரோட்டை விரிவுபடுத்துகிறது. இதுகுறித்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ராகுல் காந்தி டுவிட்டர் வலைதளத்தில் இந்த செய்தியை பகிர்ந்து, ‘மோடி அவர்களே, இதற்காகவும் நீங்கள் மார்தட்டிக்கொள்வீர்களா? இதுபற்றி தயவு செய்து விளக்குவீர்களா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

-dailythanthi.com

TAGS: