ஈழத்தின் புதுகுடியிருப்பில் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வுகள்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் புதுகுடியிருப்பு அலுவலகத்தில் இன்று பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வை கைவேலி பெண்கள் அமைப்பின் தலைவர் எம்.பி. இராயேஸ்வரி தலைமை தாங்கி நடத்தியிருந்தார்.

இதன்போது எழுச்சிப் போரில் உயிர் நீத்த பெண் மாவீரர்களின் நினைவாக சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மேலும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் மற்றும் முல்லைத்தீவு பெண்கள் அமைப்பை சேர்ந்த பலர் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-puthinamnews.com

TAGS: