ஹரப்பான் பேரணி: பிஎன் அமல்படுத்திய திட்டங்களில் 99 விழுக்காடு மக்களை ஏமாற்றுவதற்காகும்

 

மணி 6.50: பிஎன் அமல்படுத்திய திட்டங்களில் 99 விழுக்காடு மக்களை ஏமாற்றும் வஞ்சக நோக்கம் கொண்டது என்று ஹரப்பான் பேரணியில் பேசிய பெர்சத்து உதவித் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான் கூறினார்.

“ஆச்சரியப்படாதீர்கள் (நான் உங்களிடம் சொல்வது பற்றி). நான்தான் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர். ஆனால், இப்போது நான் உங்கள்முன் நிற்கிறேன்.

“ஏன்? ஏனென்றால் நான் அரசாங்கத் தலைவர்கள் மீது சலிப்படைந்து விட்டேன். அவர்கள் எனது முன்னாள் எஜமானர்கள்.

“ஏற்பாடு செய்யப்பட்ட திட்டங்களில் 99 விழுக்காடு மக்களை வஞ்சித்து அவர்களின் உள்ளத்தைக் கவரும் நோக்கம் கொண்டவை என்று அவர் மேலும் கூறினார்.

பெட்டாலிங் ஜெயா, பாடாங் திமோரில் நடைபெற்றுக்கொன்டிருக்கும் ஹரப்பான் கொள்ளைக்கார ஆட்சி எதிர்ப்பு பேரணி மணி 7.00 லிருந்து 8.00 வரையிலான இடைவேளைக்குப் பின்னர் இரவு மணி 8க்கு மீண்டும் தொடரும்.