ஸாகிட்: ரோஹிங்யா அக்திகளுக்கு மலேசியா மருத்துவமனை கட்டும்

பங்களாதேஷ், கோக்ஸ் பஜாரில் ரோஹிங்யா இன அகதிகளுக்கு ரிம3.5 மில்லியன் மருத்துவமனையை மலேசியா கட்டும் என்று மலேசிய துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறினார்.

மலேசிய இராணுவப் படையின் மருத்துவப் பிரிவு இந்த மருத்துவமனையைக் கட்டும். தொடக்கத்தில் இது 50 படுக்கைகளைக் கொண்டிருக்கும்.

பங்களாதேஷ் பிரதமர் ஷீக் ஹசினா இதற்கான அனுமதியைக் கொடுத்துள்ளார். இந்த அனுமதியை கோலாலம்பூரிலுள்ள பங்களாதேஷ் ஹைகமிஷன் என்னிடம் வழங்கியது என்று அவர் கூறினார்.