நஜிப்: இந்தியச் சமூகத்தின் ஆசைகள் எம்ஐபியில் செதுக்கப்பட்டுள்ளன

 

தேசிய முதன்மை நிலைக்கு ஒப்ப இந்நாட்டு இந்தியச் சமூகத்தின் மீது பிரதமர் நஜிப் நிச்சயமான தாக்கத்தை உருவாக்க உறுதிபூண்டுள்ளார்.

இவ்வாண்டின் தீபாவளி கொண்டாட்டம் மிகச் சிறப்பானது ஏனென்றால் அவர்களின் எதிர்பார்ப்புகளும் விருப்பங்களும் கடந்த ஏப்ரலில் வெளியிடப்பட்ட மலேசிய இந்தியப் பெருந்திட்டத்தில் (எம் ஐபி) செதுக்கப்பட்டுள்ளன என்று நஜிப் கூறுகிறார்.

சூழ்நிலைக்கு ஒளியேற்ற தீபாவளி வந்து விட்டது. ஒளிவீசும் விளக்குகளும் கோல அலங்காரங்களும் நமது நல்லிணக்க வாழ்க்கைச் சூழலின் பிரதிபிம்பம் ஆகும் என்று நஜிப் அவரது முகநூலில் பதிவு செய்துள்ளார்.

மலேசியா நாம் பெருமைப்படும் நிலையான பொருளாதார முன்னேற்றத்தையும் விரைவான மேம்பாட்டையும் கண்டுள்ளது.

உயர் தொழில் நுட்பம் மற்றும் நவீன வசதிகளை நாம் பெற்றிருந்த போதிலும், நமது பண்பாட்டு அருந்தனிப்பண்பு தொடர்ந்து நீடிக்கிறது.

தீபாவளியைக் கொண்டாடும் அனைத்து இந்துக்களுக்கும் அவர் தீபாவளி வாழ்த்து கூறினார்.