தியன் சுவா சிறையிலிருந்து அக்டோபர் 27 இல் விடுவிக்கப்படுவார்

 

காஜாங் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியன் சுவா அவரது ஒரு மாத கால சிறைத் தண்டணையின் முடிவில் அக்டோபர் 27இல் விடுதலை செய்யப்படுவார்.

விடுதலை செய்யப்படும் தியன் சுவா அடுத்த வாரம் தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பார் என்று அவரது வழக்குரைஞர் என். சுரேந்திரன் கூறினார்.

போலீசாரின் உத்தரவுப்படி நடக்க மறுத்தார் என்ற குற்றசாட்டில் செசன்ஸ் நீதிமன்றம் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து ஜனவரி 23, 2014 இல் அவருக்கு ஒரு மாத சிறைத் தண்டனையும் ரிம1,000 அபராதமும் விதித்தது