அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பித்துள்ளனர்.

அநுராதபுரம் சிறையில் 20 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளும் வவுனியா நீதிமன்றத்துக்கு மாற்றப்பட வேண்டும் என்றும் கோரியும், தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோரியுமே உண்ணாவிரதப் போராட்டத்தினை மாணவர்கள் ஆரம்பித்துள்ளனர்.

-puthinamnews.com

TAGS: