மந்திரவாதியின் பேச்சை கேட்டு, நான்கு வயது சிறுமியை கடத்தி நரபலி கொடுத்த குடும்பத்தினர்..

உத்தரபிரதேச மாநிலத்தின் சஹாரான்பூர் நகரை சேர்ந்த தம்பதி சதீஷ் சிங் மற்றும் நிம்தா, இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளது. ஐந்தாவதாக ஆண் குழந்தை பிறந்த நிலையில் பிறந்த 18 மாதங்களில் திடீரென உயிரிழந்துள்ளது.

தங்களுக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என சதீஷ் மற்றும் நிம்தா ஆசைப்பட்டுள்ளனர். இது குறித்து தங்கள் பகுதியை சேர்ந்த விரிகிஷ் பால் என்ற மந்திரவாதியிடம் ஆலோசனை கேட்டுள்ளனர்.

சிறுமி ஒருவரை நரபலி கொடுத்தால் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறக்கும் என மந்திரவாதி கூறியுள்ளார். இதையடுத்து பக்கத்து வீட்டில் இருக்கும் அக்‌ஷிதா (4) என்ற சிறுமியை நிம்தா மற்றும் தனது தந்தை கபூல் சிங் உதவியுடன் கடத்திய சதீஷ் உடல்பாகங்களை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ளார்.பின்னர் சடலத்தை அங்குள்ள ஒரு குளத்தில் தூக்கி போட்டுள்ளார், இரண்டு நாட்கள் கழித்து அங்ஷிதாவின் சடலத்தை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து சதீஷ், நிம்தா, கபூல் மற்றும் மந்திரவாதி விரிகிஷை போலீசார் கைது செய்துள்ளனர்.ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் இந்த கொடூர செயலை செய்துவிட்டதாக சதீஷ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

-athirvu.com

TAGS: