ஷாபி கைது: வாரிசான் கட்சியை முடக்குவதுதான் நோக்கமாம்

பார்டி   வாரிசான்     சாபா (வாரிசான்)  தலைவர்   ஷாபி   அப்டால்  கைது   செய்யப்பட்டதன்   நோக்கமே    அக்கட்சியை    முடக்கிப்  போடுவதுதான்    என  டாக்டர்   மகாதிர்   முகம்மட்     கூறினார்.

பிரதமர்    நஜிப்     அப்துல்    ரசாக்தான்   ஷாபியைக்  கைது    செய்யும்    உத்தரவிட்டார்  என்றும்   பக்கத்தான்   ஹரபான்   தலைவருமான   மகாதிர்   கூறினார்.

“வாரிசானை   முடக்கிப்  போடவும்   அவரின்  ஆதரவாளர்களைப்   பயமுறுத்தவும்தான்    ஷாபி   கைது     செய்யப்பட்டிருக்கிறார் ”,  என   மகாதிர்   இன்று   அவரின்   வலைப்பதிவில்   கூறியிருந்தார்.

ஷாபியை  நேற்றிரவு   எம்ஏசிசி   விசாரணைக்கு    அழைத்திருந்தது. அவர்   சாபா  எம்ஏசிசி   தலைமையகத்தில்  நான்கு  மணி  நேரம்    விசாரிக்கப்பட்டார்.   விசாரணையின்  முடிவில்  கைது   செய்யப்பட்டார்.