பினாங்கில் நிலச்சரிவு: மூவர் இறந்தனர்; 11 பேர் புதையுண்டர்

 

பினாங்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று தொழிலாளர்கள் இறந்ததுடன் 11 பேர் புதையுண்டனர்.

கொல்லப்பட்டவர்களில் ஒருவர் மலேசியர், மற்ற இருவரும் வங்காளதேசிகள்.

பினாங்கு மாநகர் மன்ற தலைவர் மரிமுனா ஷரீப் நிலச்சரிவு தஞ்சோங் பூங்காவில் ஏற்பட்டதை உறுதிப்படுத்தினார்.

இச்சம்பவம் காலை மணி 8.30 அளவில் ஏற்பட்டது. நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து மாறுபட்ட தகவல் வந்துள்ளன.

போலீஸ் தகவல்படி 20 பேர் உயிருடன் புதையுண்டுள்ளனர். தீ மற்று மீட்பு இலாகா, 15 லிருந்து 20 பேர் உயிருடன் புதையுண்டுள்ளதாக கூறுகிறது.