செருப்பினை வாயால் சுத்தம் செய்ய வைக்கப்பட்ட கொடூரம் – இந்த அவலம் நடந்தது எங்கே தெரியுமா?

பீகாரில் அனுமதியின்றி பஞ்சாயத்து தலைவரின் வீட்டுக்குள் நுழைந்த காரணத்தால் சவரத்தொழிலாளிக்கு வழங்கப்பட்ட தண்டனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் ஷெரிப் மாவட்டத்தில் உள்ள நாலந்தா அருகேயுள்ள அஜேபூர் பஞ்சாயத்தின் தலைவராக இருப்பவர் சுரேந்திர யாதவ்.

இதே கிராமத்தில் சவரத் தொழில் செய்து வரும் மகேஷ் தாக்கூர் என்பவர் அஜய் யாதவின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இந்தக் கிராமத்தின் வழக்கப்படி, ஆண்கள் இல்லாத சமயங்களில் பிற ஆண்கள் வீட்டுக்குள் போகக் கூடாதாம். மகேஷ் தாக்கூர் சென்ற சமயத்தில் சுரேந்திர யாதவ் வீட்டில் இல்லை.

இதையடுத்து, கிராம பஞ்சாயத்துக் கூட்டப்பட்டது. பஞ்சாயத்தில் மகேஷ் தாக்கூருக்கு காலணிகளை வாயால் சுத்தப்படுத்த வேண்டுமென விநோதத் தண்டனை வழங்கப்பட்டது.

‘சுரேந்திர யாதவ் வீட்டில் இல்லாதது தனக்குத் தெரியாது’ என்று மகேஷ் விளக்கமளித்தும் பலன் இல்லை. பஞ்சாயத்தார் விளக்கத்தை ஏற்கவில்லை. கொடுத்த தண்டனையை நிறைவேற்றினர். மேலும், சில பெண்கள் அவரை செருப்பாலும் அடித்தனர்.

இது குறித்து நாலந்தா பொலிசில் புகார் அளிக்கப்பட்டது. பஞ்சாயத்துத் தலைவர் உள்பட 8 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

-athirvu.com

TAGS: