பயங்கரவாதிகளின் வீடுகளை குறி வைத்து போலீசார் தாக்குதல் நடத்த வேண்டாம்-மெகபூபா முப்தி வேண்டுகோள்

ஜம்மு, ஜம்மு காஷ்மீர் மாநிலம் மனிகம் பகுதியில் போலீஸ் பயிற்சி பள்ளியில் நடந்த விழாவில் மெகபூபா முப்தி கலந்துகொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது:

பயங்கரவாதிகளின் வீடுகளை குறிவைத்து போலீசார் தாக்குதல் நடத்த வேண்டாம். அப்படி செய்வதால் போலீசாரின் குடும்பங்களையும் வீடுகளையும்  பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்குதல் நடத்துவார்கள். போலீசாருக்கும் பயங்கரவாதிகளுக்கும் வித்தியாசம் உள்ளது அதனை மாநில போலீசார் பேணி காக்க வேண்டும். பிரதமர் மோடி மாநில போலீசார் செயல்பாடுகள், பங்களிப்பு குறித்து பெருமிதத்துடன் கூறியுள்ளார். உள்ளூர் பயங்கரவாதிகளை அவர்களாகவே வந்து சரண் அடைய வைப்பதற்கான முயற்சிகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும்.

பயங்கரவாதிகள் குடும்பங்களை போலீசார் தாக்கினால் போலீசார் குடும்பங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஹிஸ்புல் அமைப்பின் தலைவர் ரியாஸ் நைகோ எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

-dailythanthi.com

TAGS: