எஸ்பிஎம், எஸ்டிபிஎம் தேர்வுகள் திட்டமிட்டப்படி நடக்கும், கல்வி அமைச்சு உறுதி செய்கிறது

 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களான பினாங்கு மற்றும் கெடாவில் எஸ்பிஎம் மற்றும் எஸ்டிபிம் தேர்வுகள் திட்டமிட்டப்படி நாளை தொடங்கும்.

பினாங்கில் 159 மையங்களில் 23, 114 மாணவர்களும், கெடாவில் 261 மையங்களில் 34, 672 மாணவர்களும் இத்தேர்வுகளில் பங்கேற்பர் என்று கல்வித் துணை அமைச்சர் பி. கமல்நாதன் பெர்னாமாவுக்கு அனுப்பியுள்ள எஸ்எம்எஸில் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சு இரு மாநிலங்களின் வெள்ள நிலைமையை மிக உன்னிப்பாக கண்கானித்து வருவதாக கூறிய அவர், வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடி தேர்வுகளுக்கான ஏற்பாடுகளைப் பாதிக்கவில்லை என்று அவர் மேலும் கூறினார்.