பினாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ரிம1 மில்லியன் சிலாங்கூர் அளித்தது

பினாங்கு மாநிலத்தை முடக்கியுள்ள பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சிலாங்கூர் மாநில அரசு ரிம1 மில்லியன் நன்கொடை வழங்கியுள்ளது.

இதனை சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி நேற்றிரவு அறிவித்தார்.

இத/ற்கும் மேலாக, சிலாங்கூர் மாநில அரசின் ஊழியர்கள் பினாங்கை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் உதவுவதற்கும் பயன்படுத்தப்படுவர் என்று அவர் மேலும் கூறினார்.

பினாங்கிற்கு லோரிகள் மற்றும் தேவைப்படும் இதர வாகனங்களை அங்கு கொண்டு சென்று வெள்ளம் வடிந்தவுடன் துப்பரவு செய்யும் வேலைகளில் உதவும்படி தாம் சிலாங்கூர் ஊராட்சிமன்றங்களுக்கு உத்தரவிட்டிருப்பதாக அஸ்மின் மேலும் கூறினார்.