ஷாபி எம்எசிசிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளர், உதவியாளர் கூறுகிறார்

 

இன்று காலையில் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) பார்ட்டி வாரிசான் சாபாவின் தலைவர் முகமட் ஷாபி அப் மீண்டும் அழைத்துள்ளதாக ஷாபியின் உதவியாளர்களில் ஒருவர் கூறினார்.

“சில ஆவணங்கள சரிபார்ப்பதற்கு அவர் தேவைப்படுகிறார்” என்று தமது பெயரை வெளியிட விரும்பாத அந்த உதவியாளர் மலேசியாகினியிடம் கூறினார்.

அவர் அளித்த தகவலின்படி, ஷாபி கடந்த வியாழக்கிழமை எம்எசிசி அலுவலகத்திற்கு சென்றிருக்க வேண்டும். ஆனால், அது இன்று காலை மணி 9க்கு தள்ளிவைக்கப்பட்டது.