போலீஸ் 1எம்டிபி விசாரணை அறிக்கைகளை எஜியிடம் கொடுத்து விட்டது

 

1எம்டிபி மீதான போலீஸ் விசாரணை அறிக்கை சட்டத்துறை தலைவர் (எஜி) அலுவலத்தில் தாக்கல் செய்யப்பட்டு விட்டதென்றும் எஜியிடமிருந்து அதற்கான பதிலுக்காக போலீஸ் காத்திருப்பதாகவும் துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறுகிறார்.

போலீஸ் விசாரணை அறிக்கை பல தடவைகளில் எஜியின் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. மேற்கொண்டு விசாரணை செய்யப்பட வேண்டும் என்ற உத்தரவுடன் அவை போலீஸுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன என்றாரவர்.

“எஜி அலுவலத்தின் உத்தரவுப்படி போலீஸ் விசாரணை மேற்கொண்டதுடன் விசாரணை அறிக்கையை எஜி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. இதுவரையில், அவர்கள் (போலீஸ்) மேல் உத்தரவுக்குக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்”, என்று பெட்டாலிங் ஜெயா உத்தாரா டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவாவிற்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் உள்துறை அமைச்சர் என்ற முறையில் கூறுகிறார்.