அன்வாருக்கு அறுவைச் சிகிட்சை

 

பக்கத்தான் ஹரப்பானின் சிறையிலடைக்கப்பட்டிருக்கும் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அவரது தோளில் நீண்டகாலமாக இருந்துவரும் பிரச்சனைக்கு அறுவைச் சிகிட்சை செய்யப்படவிருக்குறது.

செப்டெம்பர் 22 இல் ஏற்பட்ட ஒரு மோட்டார் சைக்கில் விபத்து காயத்தை மேலும் சீர்கெடச் செய்து விட்டதால் அறுவைச் சிகிட்சையை இனிமேலும் தள்ளிப்போட முடியாது என்று அன்வாரின் சிகாம்புட் வீட்டில் அவரது மகள்கள் நுருல் நுஹா, நுருல் இலாம் மற்றும் நுருல் இமான் ஆகியோர் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினர்.

அன்வார் கோலாலம்பூர் மருத்துவமனையில் நாளை சேர்க்கப்படுவார் என்று கூறப்பட்டது.