நாட்டை பிரிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை

நாட்டை பிரிக்கும் முயற்சியில் தாம் ஈடுபட்டுள்ளதாக கூட்டுஎதிரணி முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யான ஒன்றென   எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்து மக்களும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் பிரிவினைவாதம் இல்லாத நாடாக இலங்கை மாற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தில் இன்று உரையாற்றும் போதே சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

-tamilmirror.lk

TAGS: