தபால் மற்று சுகாதார பணியாளர்களுக்கு தபால் வாக்களிப்பு

 

எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலின் போது கடமையிலிருக்கும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மற்றும் அரசாங்க சுகாதாரதுறை பணியாளர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் வசதி விரிவுப்படுத்தப்படும்.

இந்த முடிவை தேர்தல் ஆணையம் கடந்த செப்டெம்பர் 25 இல் எடுத்ததாக ஆணையத்தின் தலைவர் முகமட் ஹசிம் அப்துல்லா தெரிவித்தார்.

இம்முடிவு அரசாங்கப் பதிவு ஏட்டில் கடந்த அக்டோபர் 23 இல் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.