மாவீரர் தினத்துக்கு தயாராகும் மட்டக்களப்பு.. முன்னாயித்தப்பணிகள் தீவிரம்..

மாவீரர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசங்களில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் புனரமைக்கப்பட்டு மாவீரர் தினத்தை அனுஸ்டிக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பகுதியில் உள்ள மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மாவீரர் தினத்தினை அனுஸ்டிக்கும் வகையிலான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

பட்டிப்பளை பிரதேச பொதுமக்கள், பொது அமைப்புகள் இணைந்து இந்த பணிகளை மேற்கொண்டனர்.

-athirvu.com

TAGS: