இஸ்லாமிய அரசு முடிவுக்கு வந்ததாக ஈரான் அதிபர் பிரகடனம் செய்தார்

 

ஈரானிய அதிபர் ஹசான் ருஹானி இஸ்லாமிய அரசு முடிவுக்கு வந்ததாக அறிவித்த பிரகடனத்தை செவ்வாய்க்கிழமை அரசு டிவி நேரடி ஒளிபரப்பு செய்தது.

ஈரானிய புரட்சிப்படையின் மூத்த தலைவர் மேஜர் ஜெனரல் காஸெம் சோலிமனியும் இஸ்லாமிய அரசு முடிவுக்கு வந்ததை நாட்டின் உச்சத் தலைவருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிய செய்தில் பிரகடனம் செய்தார். இச்செய்தி புரட்சிப்படையின் செபா நியூஸில் வெளியிடப்பட்டது.

சோலிமனியின் வீடியோக்களும் படங்களும் ஈரானிய ஊடகங்களில் சமீப ஆண்டுகளில் அடிக்கடி பதிவு செய்யப்பட்டு வந்தன.

ஈரானின் மிக சக்திவாய்ந்த இராணுவமான புரட்சிப்படை சிரியாவின் அதிபர் பஷார் அல்-அஸாட் மற்றும் ஈராக்கின் மத்திய அரசு ஆகியவற்றுக்கு ஆதரவாக பல ஆண்டுகளாக போரிட்டு வருகிறது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட புரட்சிப்படையின் உறுப்பினர்கள், அவர்களுடைய மூத்த தளபதிகள் உட்பட, சிரியாவிலும் ஈராக்கிலும் கொல்லப்பட்டுள்ளனர்.