அங்கு ஒரு கோடி, இங்கு பல கோடிகளை தானமாக கொடுத்த ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினி காந்த் அரசியலுக்கு வருவாரா என்பது பல தலைவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் அவர் அமைதி காத்து வருகிறார். ஆனாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது ரசிகர்களின் கருத்து.

அதே நேரத்தில் அவர் படங்களில் நடித்து வருவது தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் அவர் இமயமலைக்கு விசிட் அடித்தார். மேலும் அங்கு வரும் பக்தர்களுக்காக ஒரு கோடி ரூபய் செலவில் தங்கும் இடம் அமைத்து கொடுத்துள்ளார்.

சமீபத்தில் கர்நாடகாவில் உள்ள ராகவேந்திரர் மந்திராலயத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்தன. தற்போது அவர் ரூ 10 கோடியாக நன்கொடை கொடுத்துள்ளார்.

இக்கோவில் புதுப்பிக்கப்படவுள்ளதோடு, பக்தர்கள் வசதிக்காக தங்குமிடங்கள் கட்டப்படவுள்ளதாம்.

-cineulagam.com