யுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியும் தேவையில்லை: சிவஞானம் சிறிதரன்

‘யுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர தமிழ் மக்களுக்கு உரிமை உண்டு. இதற்கு இடையூறு ஏற்படுத்த யாருக்கும் உரிமையில்லை’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல சிரமதானப் பணிகளின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூர எவரின் அனுமதியையும் பெறத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

-puthinamnews.com

TAGS: