சிலாங்கூர் எம்பியின் இன்னொரு உறவினரையும் எம்ஏசிசி கைது செய்யப்போகிறதாம், உத்துசான் கூறுகிறது

மலேசிய   ஊழல்தடுப்பு    ஆணையம்(எம்ஏசிசி)  சிலாங்கூர்   மந்திரி   புசார்   அஸ்மின்  அலியின்   இன்னொரு   உறவினரையும்   விரைவில்   கைது    செய்யப்போவதாக    உத்துசான்   மலேசியா   செய்தி   வெளியிட்டுள்ளது.

அவர்  அரசாங்கக்   குத்தகைகள்   பெறுவதற்கு     இடைத்தரகராக    இருந்து   வந்துள்ளார்   எனத்   தகவலறிந்த    வட்டாரங்கள்    தெரிவித்ததாக   அது   கூறிற்று.

அந்நபர்   ஒரு   சிறு  வியாபாரிதான்   ஆனாலும்    ஆடம்பர    வாழ்க்கை    வாழ்ந்து   வந்ததாக    அவ்வட்டாரங்கள்    அம்னோவுக்குச்  சொந்தமான   அந்நாளேட்டிடம்  கூறின.

“அவர்மீதான  குற்றச்சாட்டுகள்  சரிதானா   என்பதை   உறுதிப்படுத்திக்கொள்ளவும்   2014 -இலிருந்து   எந்த  அளவுக்கு    அவர்   அரசாங்கத்   திட்டங்களில்   சம்பந்தப்பட்டிருக்கிறார்   என்பதைக்   கண்டறியவும்   விரிவான   விசாரணைகள்   நடைபெற்று  வருகின்றன”,  என்று   அவை   தெரிவித்தன.