சி4: கருத்தரங்கில் 1எம்டிபியைச் சேர்த்துக்கொள்ள உலக வங்கி விடுத்த வேண்டுகோளை அரசாங்கம் உதாசீனப்படுத்தி விட்டது

 

உலகச் சொத்து மீட்பு கருத்தரங்கு (ஜிபார்) நிகழ்ச்சியில் 1எம்டிபி ஊழல் விவகாரத்தை ஓர் ஆய்வு அங்கமாகச் சேர்துக்கொள்ள வேண்டும் என்று உலக வங்கி விடுத்திருந்த வேண்டுகோளுக்கு அரசாங்கம் செவிசாய்க்கவில்லை.

சி4 என்ற அமைப்பின் செயல்முறை இயக்குனர் சிந்தியா கேபிரியல், இவ்வேண்டுகோளை அரசாங்கம் நிராகரிக்கவில்லை, ஆனால் எதிர்வினையாற்றவில்லை என்று மலேசியாகினியிடம் கூறினார்.

“நான் உலக வங்கியிடம் 1எம்டிபி பற்றி கேட்ட போது. அரசாங்கத்திடமிருந்து எந்தப் பதிலும் இல்லை எங்களிடம் கூறப்பட்டது”, என்று சிந்தியா கூறினார்.