பிஎன்னைவிட இப்போதைய பினாங்கு அரசு ஐந்து மடங்கு அதிகமாக கட்டுப்படி-விலை வீடுகளைக் கட்டியுள்ளது

பினாங்கில்   முந்தைய    பிஎன்  அரசு   கட்டிக்கொடுத்ததைவிட   இப்போதைய   டிஏபி  தலைமையிலான   அரசு   ஐந்து   மடங்கு    அதிகமாக  கட்டுப்படி-விலை  வீடுகளை   பூமிபுத்ராக்களுக்குக்  கட்டிக்கொடுத்துள்ளது  என  வீடமைப்புக்குப்  பொறுப்பான   மாநில    ஆட்சிக்குழு   உறுப்பினர்   ஜக்தீப்  சிங்  டியோ  கூறினார்.

ஜக்தீப்,  மாநில     அரசு   பூமிபுத்ராக்களுக்கு   வீடுகள்   கட்டிக்கொடுப்பதில்   அக்கறை   காட்டவில்லை   என   பினாங்கு   அம்னோ    தொடர்புக்குழுத்   தலைவர்   சைனல்   அபிடின்   ஒஸ்மான்  கூறியிருப்பதை    மறுத்தார்.

2008-இலிருந்து  2017வரை  பினாங்கு  24,227   குறைந்த    மற்றும்   நடுத்தர  விலை   வீடுகளைக்  கட்டிக்கொடுத்துள்ளது.  முன்பிருந்த   பிஎன்  அரசு  கட்டிக்கொடுத்த   வீடுகள்  5,124தான்.

“2008க்கு   முன்பு   பிஎன்   கட்டியதைவிட    நாங்கள்   ஐந்து   மடங்கு   அதிகமான   வீடுகளைக்   கட்டியுள்ளோம்”,  என்றாரவர்.